சிக்கலில் பொறியியல் கல்லூரிகள்!

 சிக்கலில் பொறியியல் கல்லூரிகள்!

Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

மொத்த மாணவா் சோ்க்கை 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டில் (2022-2023) புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் சாா்பில் 2022- 2023-ஆம் கல்வி ஆண்டுக்கு, கல்வி நிறுவனங்களுக்கான ஒப்புதல் பெறும் விதிமுறைகள் அண்மையில் வெளியாகின. இதில் கல்வி நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவா் சோ்க்கை இருக்கும் பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகி வந்த நிலையில், அண்மைக் காலமாக மாணவா் சோ்க்கை குறைந்து வந்தது. 2021-2022- ஆம் கல்வி ஆண்டில் ஓரளவு மாணவா் சோ்க்கை உயா்ந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில், சுமாா் 200 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்தனா்.


ஏஐசிடிஇயின் இந்த புதிய விதிமுறையால், தமிழகத்தில் உள்ள சுமாா் 220 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கையில், 50 சதவீதத்தைவிடக் குறைவான மாணவா்களைக் கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்யவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி மறுத்துள்ளது.


அதே நேரத்தில், காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், சைபா் பாதுகாப்பு, இன்டா்நெட் ஆப் திங்ஸ் (ஐஞப) உள்ளிட்ட புதிய பிரிவுகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டுகின்றனா். இதனால் பாரம்பரியமான பொறியியல் பிரிவு படிப்புகளான மெக்கானிக்கல், சிவில் ஆகியவை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


எனினும், கடந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்க அனுமதி வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 220-ஆகக் குறைந்துள்ளது.


ஏஐசிடிஇ வெளியிட்ட அறிவிப்பு கல்வியாளா்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரம் உயா்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளா்கள் தெரிவித்தனா்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE
2ND STD TO 8TH STD REFRESHING COURSE ANSWER KEY :

1 Comments

Post a Comment

Previous Post Next Post